இந்திய அரசின் கணினிகளை வேவுபார்க்கும் சீன ஹாக்கர்கள்
பீஜிங்கின் இந்தியத் தூதரகத்தின் இணையதளமும், அதன் இணையப் பயனர் செயலிகளும் சீன மென்பொருள் விஷமிகளால் ஊடுருவப்பட்டுள்ளன. இது தொடர்ந்து நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்திய இராணுவம் சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த ஹாக்கர்கள் தேடுவதாகவும் தெரியவந்துள்ளது.
சீனாவின் திட்டமிட்ட இணையப் போர்முறை (Cyber War) ஐ.நாவிற்கு கவலை தந்துள்ளது. 2050ற்குள் இணையம்(Internet technology) உலகின் எந்த இராணுவத்தையும் இடைமறித்து ஸ்தம்பிக்கச் செய்யும் திறனைப் பெறுவது சீனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பாகும்.
தகவல் தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கும் இந்தியா சீனாவின் இந்த சவாலை சந்திப்பதில் தடுமாறுவதற்கு அடிப்படைக் காரணம் சீனா தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதேயாகும் எனக் கருதப்படுகிறது.
Technorati Tags: சீன மென்பொருள் விஷமிகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home